தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகின்ற 11ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகளை இயக்க அதற்கு தமிழக அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், “தீபாவளி பண்டிகை தொடங்க இருப்பதால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பாக பொதுமக்கள் எவ்வித சிரமும் இல்லாமல் பயணம் செய்வதற்கு ஏற்ற வகையில் சென்னையிலிருந்து கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகை, காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய அனைத்து இடங்களுக்கும் வருகின்ற 11ம் தேதி முதல் 13ஆம் தேதி வரையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
அதனைப்போலவே திருச்சியில் இருந்து தஞ்சை, கும்பகோணம், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கும், மதுரை, கோவை, திருப்பூர் ஆகிய ஊர்களில் இருந்து திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையை பொதுமக்கள் அனைவரும் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
சென்னையில் இருந்து பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், திருவையாறு ஆகிய பகுதிகளுக்கு தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்தும், கரூர், திருச்சி, அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை, அறந் தாங்கி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்தூர், நாகை, வேளாங் கண்ணி, மயிலாடுது, சீர்காழி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் ஆகிய பகுதிகளுக்கு கோயம்பேடு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பஸ் நியைத்தில் இருந்தும் இயக்கப்பட உள்ளது. தீபாவளி முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களுக்கு 14, 15, 16, 17 ஆகிய நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.