Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தீபாவளி செலவுக்கு பணம் இல்லை….. திட்டம் தீட்டிய 8 வாலிபர்கள் கைது…. போலீஸ் அதிரடி….!!!

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 8 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி மேல்காடு பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள முனியப்பன் கோவில் அருகே வீச்சரிவாளுடன் நின்று கொண்டிருந்த 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் ஆண்டிப்பட்டி சாலை மரத்து வட்டத்தில் வசிக்கும் விஜயகுமார், சூர்யா, அசோக், சத்தியமூர்த்தி, சீனிவாசன், தினேஷ்குமார், பிரகாஷ், மற்றும் மெய்யழகன் என்பது தெரியவந்தது. இவர்கள் தீபாவளி செலவுக்கு பணம் இல்லாததால் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் 8 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த வீச்சரிவாளை பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |