தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு விரைவு பேருந்துகளில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது .
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட்டு வரும் அரசு பேருந்துகளில் 30 நாட்களுக்கு முன்பாக ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது. இதன் மூலமாக கடைசி கட்ட நெருக்கடியை தவிர்க்கும் வகையில் பயணிகள் முன்கூட்டியே தங்களது இருக்கைகளை முன் பதிவு செய்து கொள்ளலாம். தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்ல விரும்பும் பொதுமக்கள் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஆயத்தமாகி வருகிறார்கள்.
அதன்படி பஸ்களில் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்யவும் திட்டமிட்டுள்ளனர். பெரும்பாலும் ரயில் மற்றும் பேருந்துகளில் செல்ல விரும்பும் மக்கள் முன்கூட்டியே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்வது வழக்கம். அந்த வகையில் அக்டோபர் 21ஆம் தேதிக்கான ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்கியது. பயணிகள் www.tnstc.in என்ற இணையதளத்தின் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.