தீபாவளி பண்டிகை இந்த வருட அக்டோபர் 24ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதால் சென்னை மற்றும் கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து அக்டோபர் 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு முதல் சொந்த ஊர்களுக்கு பலரும் புறப்படுவர். அதனால் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஏற்கனவே முன்பதிவு வசதி இருந்தது.கொரோனா காலத்திற்குப் பின்னர் ஒரு மாதத்திற்கு முன்பு முன்பதிவு செய்யும் வகையில் தமிழக அரசின் போக்குவரத்து கழகத்தின் www.tnstc.com என்ற இணையதளத்தில் மாற்றம் செய்யப்பட்டது.
அவ்வகையில் அடுத்த மாதம் 21ஆம் தேதிக்கு அரசு பேருந்துகளில் பயணிக்க திட்டமிடுவோர் இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 22ஆம் தேதி பயணம் மேற்கொள்ள நாளையும்,அக்டோபர் 23ஆம் தேதி பயணம் மேற்கொள்ள நாளை மறுநாளும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.