நீலகிரி குன்னூரில் திமுக சார்பாக இந்தித்திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. அதில் தி.மு.க பொதுச் செயலாளரும், நீர்வளத் துறை அமைச்சருமான துரை முருகன் கலந்துகொண்டு பேசினார். அப்போது திமுக தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது “திமுக என்ற இந்த இயக்கத்திற்கு இந்தி மொழி எதிர்ப்பே மாபெரும் அடையாளத்தைக் கொடுத்தது.
திமுக-வைச் சேர்ந்த பல பேர் உயிர்த்தியாகம் செய்து இந்தித் திணிப்பை தமிழகத்திற்குள் நுழைய விடாமல் தடுத்திருக்கின்றனர். திமுக இல்லையென்றால் இந்த மாநிலம் காட்டு மிராண்டிகளின் வசம் போய்விடும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஆகவே மக்கள் இதனை உணரவேண்டும்” என்று பேசினார் .