தில்லியிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் 2 புது கட்டிடங்கள் கட்டுவதற்குரிய முன் மொழிவுக்கு தில்லி அரசானது ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கென 157 மரங்கள் இடமாற்றம் செய்யப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து இருக்கிறார். இது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது, புதியதாக அறிவிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் புது ஆய்வகங்கள் மற்றும் ஆராய்ச்சி கட்டிடங்கள் கட்டப்பட இருக்கிறது. இதற்காக ஐ.ஐ.டி வளாகத்திலுள்ள 157 மரங்கள் வேறு இடத்தில் இடமாற்றம் செய்யப்படும். எனினும் புதியதாக 1,570 மரங்கள் நடப்படும் என்று கூறினார்.
ஐஐடி-யில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன் பெறும் அடிப்படையில் புது கட்டிடங்கள் கட்டப்படுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த 7 வருடங்களுக்கு மரங்களைப் பராமரிக்கும் பொறுப்பை ஐஐடி ஏற்கும். தில்லி அரசால் அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தின் கீழ், வேம்பு, அமல்டாஸ், பிபால், பில்கான், குலர், பர்கட், மா மற்றும் ஷீஷாம் உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் நடப்படும். இடமாற்றம் செய்யப்படவேண்டிய மரங்களைப் பொறுத்தவரையிலும் தேவையான நிபந்தனைகளை நிறைவேற்றிய பின் , உடனே செயல்முறையைத் துவங்கி 6 மாதங்களுக்குள் முடிக்க ஐஐடி-க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.