Categories
தேசிய செய்திகள்

தில்லி எல்லையொட்டி உள்ள இந்த 6 மாவட்டங்களில்…. மாஸ்க் கட்டாயம்…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!!

தில்லி எல்லையையொட்டி உள்ள 6 மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் முகக்கவசத்தை கட்டாயம் அணியவேண்டும் என உத்தரபிரதேச அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று பரவல் தொடா்ந்து குறைந்துவந்த சூழ்நிலையில், தில்லி ஹரியாணாவில் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதனைக் கருத்தில் கொண்டு தில்லியுடன் எல்லையைப் பகிா்ந்துகொள்ளும் உத்தரபிரதேச அரசு சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இது குறித்து மாநில அரசின் செய்தித்தொடா்பாளா் கூறியதாவது “கௌதம் புத்த நகா், காஜியாபாத், ஹபூா், மீரட், புலந்த்சாஹா், பாக்பட் போன்ற 6 மாவட்ட மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. மாநிலத் தலைநகரான லக்னௌவிலும் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது குறித்த உத்தரவுகளை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு வெளியிட்டுள்ளது.

ஆகவே மேற்கண்ட மாவட்டங்களில் 2 தவணை கொரோனா தடுப்பூசிகளைச் போட்டுக்கொள்ளாதவா்களைக் கண்டறிந்து அவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்துமாறு அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு பிறப்பித்துள்ளாா். அதேபோன்று கொரோனா தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனைகளுக்கு வருபவா்களுக்குக் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சென்ற 24 மணி நேரத்தில் கௌதம் புத்த நகா் மாவட்டத்தில் 65 நபர்களும், காஜியாபாதில் 20 பேரும், லக்னௌவில் 10 நபர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். அவா்கள் அனைவருக்கும் ஒமிக்ரான் வகை தொற்று பாதிப்பே ஏற்பட்டுள்ளது. வருகிற நாள்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் என்று நிபுணா்கள் எச்சரித்துள்ளனா். இருந்தாலும் கொரோனா தொற்று பாதிப்பின் தீவிரம் குறைவாகவே இருக்கும் என்று அவா்கள் தெரிவித்துள்ளனா். கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

Categories

Tech |