Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“திற்பரப்பு நீர்வீழ்ச்சி” குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள்…. காரில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

காரில் வைத்திருந்த பணம் மற்றும் செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதியம்புத்தூர் பகுதியில் ராமர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராமரும், அவருடைய நண்பர்கள் 7 பேரும் சேர்ந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலாக்காக சென்றுள்ளனர். இவர்கள் திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு காரை சாலையின் ஓரமாக நிறுத்தி விட்டு சென்றுள்ளனர்.

அவர்கள் திரும்பி வந்து பார்க்கும்போது காரிலிருந்து 3 செல்போன்கள் மற்றும் ரூபாய் 5,000 பணம் ஆகியவை திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து குலசேகரம் காவல்நிலையத்தில் ராமர் புகார் அளித்தார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |