Categories
மாநில செய்திகள்

திரையரங்குகள், வணிக வளாகங்களுக்கு – அரசு கடும் எச்சரிக்கை…!!!

நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கையை இழந்து வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பினார். இந்நிலையில் தற்போது மீண்டும்கொரோனா  வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

மேலும் கடுமையான கொரோனா விதிமுறைகள், நடவடிக்கைகளும் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திரையரங்குகள், வணிக வளாகங்களில் விதிமுறைகளை மீறினால் கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மாவட்டங்களில் கொரோனா  சிகிச்சை மையங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |