வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் தங்க நகையை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் ராமநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் குடும்பத்துடன் தனது சொந்த ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்காக சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்று திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தர்.
அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 8 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ராமநாதன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.