Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் அருகே மதுபானங்களை கொள்ளையடித்து விற்றவர் கைது..!!

10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கொள்ளையடித்து விற்பனை செய்த மதுபான கடை ஊழியர்கள் மற்றும் பார் ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம்,  ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து மதுபான கடைகளையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் எதிரொலியாக திருவள்ளூர் அடுத்த காக்களூர் நெடுஞ்சாலையில் உள்ள மதுபான கடைகள் மூடப்பட்டது. கடையின் மேற்பார்வையாளரான பொற்சிலம்பு அந்த கடையில் பணியாற்றும் செந்தில், ராமகிருஷ்ணன் ஆகியோரிடம் சாவியை ஒப்படைத்து உள்ளார.

இந்த நிலையில் மதுபானங்கள் விற்பனை செய்வதாக மேற்பார்வையாளருக்கு தகவல் கிடைத்துள்ளது. புகாரின் பேரில் மதுபான கடைக்கு சென்ற காவல்துறையினர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவர்கள் யார் என்று விசாரணையில் ஈடுபட்டனர். அதில் டாஸ்மாக் ஊழியர்கள் மூலம் மது விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து மதுபான கடை ஊழியர்கள் 2 பேர் மற்றும் பார்  ஊழியர்கள் 3 பேர் என மொத்தமாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். 24ம் தேதி கடையை மூடியபோது 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள் இருந்ததாகவும் விரிவான விசாரணைக்கு பின்னரே எவ்வளவு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவரும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |