Categories
மாநில செய்திகள்

திருவள்ளுவரை பிராமணராக சித்தரிப்பு… பெரும் அதிர்ச்சி… தமிழர்கள் கொந்தளிப்பு…!!!

சிபிஎஸ்இ 8 ஆம் வகுப்பு புத்தகத்தில் திருவள்ளுவரை பிராமணராக சித்தரிக்கப்பட்டுள்ளது தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் சிபிஎஸ்இ எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் திருவள்ளுவர் மற்றும் அவருடைய மனைவி வாசுகியை பிராமணர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளது தமிழர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தி மொழி திணிப்பை தொடர்ந்து, தமிழர்களின் அறத்தின் அடையாளமாக இருக்கும் திருவள்ளுவரையும் பிராமணராக மத்திய பாஜக அரசு சித்தரித்துள்ளதால், தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மு

Categories

Tech |