திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் யானை கூட்டம் சுற்றி வருவதால், பக்தர்கள் வாகன ஓட்டிகள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அன்றாடம் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் கீழ் திருப்பதி இருந்து மேல் திருப்பதிக்கு ஆந்திர மாநில அரசின் பஸ் போக்குவரத்து வசதி உள்ளது. இத்துடன் ஆந்திராவில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் கார், வேன் மற்றும் தனியார் பேருந்துகள் மூலமாக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருப்பதியில் இருந்து திருமலைக்குச் செல்லும் மலைப்பாதை 22 கிலோமீட்டர் தொலைவு கொண்டது. இந்த மலைப்பாதையை சுற்றி அடர்ந்த வனப்பகுதி இருப்பதால் வனத்துக்குள் இருந்து கரடி, சிறுத்தை, யானை, பாம்பு, மான், உள்ளிடமான விலங்குகள் அவ்வபோது சாலைகளுக்கு வருவது உண்டு. இவற்றை கண்டு வாகன ஓட்டுகளும் பக்தர்களும் அலறியெடுத்து ஓடும் சம்பவம் வாடிக்கையாக நடந்து வருகின்றது.
இந்நிலையில் நேற்று திருமலை திருப்பதி மலை பாதையில் ஏழாவது கிலோமீட்டர் தொலைவில் பத்துக்கு மேற்பட்ட யானைகள் கூட்டம், இரண்டு குட்டி யானை அடர்ந்த வனப்பகுதியில் இருந்து மலைப்பகுதிக்கு வந்துள்ளன. அங்கு ஆஞ்சநேயர் கோவில் அருகே ஒன்று கூடிய யானை கூட்டம் பிழறியபடி ஆக்ரோசத்துடன் மரக்கிளைகளை தும்பிக்கையால் உடைத்து வீசியது. அதனை தொடர்ந்து சாலையை வழிமறித்து அவை கும்பலாக நின்று கொண்டிருந்தது. இதை கண்ட வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். யானைகளின் ரோட் ஷோ காரணமாக திருப்பதி திருமலை மலைப்பாதையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.