திருமண இணையதளத்தில் பதிவு செய்யப்படும் பெண்களை குறி வைத்து மோசடிகள் அதிகம் நடைபெறும் சூழ்நிலையில், இது போன்ற மோசடி நபர்களிடம் எச்சரிகையாக இருக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது “போலியான ஆப்கள் வாயிலாக டாக்டர் வரன் இருப்பதாக கூறி அந்த போலியான நபரை அறிமுகப்படுத்தி, உங்களிடம் தொடர்பு ஏற்படுத்தி பரிசு பொருட்கள் அனுப்புவார். அந்த பரிசு பொருள் ஏர்போர்ட்டில் வரும்போது கஷ்டமர் உங்களை தொடர்புகொண்டு குறிப்பிட்ட தொகையை செலுத்துமாறு கூறுவார். இந்த நிலையில் இந்த பரிசு பொருளானது 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ளது என்று ஆசைக்காட்டி 3 லட்சம் என்ற அளவில் பணம் கொடுக்க சொல்வார்கள்.
இதற்கிடையே இது போன்று பல்வேறு முறை உங்களை ஏமாற்றி நேரில் பார்க்க வருவதாக மெசேஜ் கொடுத்து, மும்பை ஏர்போர்ட்டிற்கு வருவார். அந்த நேரத்தில் தன்னிடம் விசா இல்லாத காரணத்தினால் நான் ஏர்போட்டில் உள்ளதாகவும், இந்த அக்கவுண்டுக்கு தயவுசெய்து பணம் அனுப்புமாறு உங்களை ஏமாற்றி 20 -30 லட்சம் வரையில் பணத்தை வாங்கிவிட்ட பிறகுதான் இவர்கள் மோசடி கும்பல் என்பது தெரியவரும். ஆகவே ஆன்லைனில் வரன் தேடுபவர்கள் ஏமாந்து விடுகின்றனர். இதனால் வரும் காலங்களில் வரன்தேடும் பெண்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றும் ஒருவர் உங்களிடம் பணத்தை கேட்பவர் என்றால் அவர் மோசடி நபர்” என்றும் டிஜிபி தெரிவித்துள்ளார்.