நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் முடிந்த பிறகு ஹனிமுன் செல்லவில்லை என கூறப்படுகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா. நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பணியாற்றிய பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்த நிலையில் தற்போது லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகின்றனர். அண்மையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா உள்ளிட்டோர் நடிப்பில் காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் ரிலீஸ் ஆனது. படத்தின் ரிலீஸ் அன்று விக்கியும் நயனும் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் வருகின்ற ஜூன் ஒன்பதாம் தேதி விக்கியும் நயனும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்தி வெளியானது.
இந்த நிலையில் சென்ற சனிக்கிழமையும் திருப்பதி கோவிலுக்கு சென்று நயனும் விக்கியும் திருமணத்திற்கான முன்பதிவு ஏற்பாடுகளை செய்ததாக சொல்லப்படுகின்றது. இதையடுத்து விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இதையடுத்து திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு அருகில் இருக்கும் ரிங் ரோட்டில் உள்ள மடம் ஒன்றில் இருவருடைய திருமணமும் நடைபெற இருப்பதாக சொல்லப்படுகின்றது. மேலும் இருவரும் இம்மடத்தை தங்களின் திருமணத்திற்காக முன் பதிவு செய்திருப்பதாக செய்தி பரவி வருகின்றது.
இந்நிலையில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் சமந்தா இளமையாக இருப்பதாகவும் நயன்தாரா தோல் சுருங்கி வயதாகி இருப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் தோல் சுருக்கம் மற்றும் வயதான தோற்றத்தை சரிசெய்வதற்கான சிகிச்சை மேற்கொள்வதற்காக நயன்தாரா திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது. இதனால் திருமணம் முடிந்த பிறகு ஆறு மாதங்கள் சினிமாவுக்கு பிரேக் விட்டு கேரளாவில் சிகிச்சை மேற்கொள்ள இருக்கின்றாராம். மேலும் விக்னேஷ் சிவன் அஜித் நடிக்கும் ஏகே 62 திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு தான் விக்கியும் நானும் ஹனிமூன் ட்ரிப் செல்வார்கள் என பேசப்படுகின்றது.