தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஹன்சிகா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட அனைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவரின் நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. தற்போது வரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஹன்சிகா தனது 31 வது வயதில் நெருங்கிய தோழியின் கணவரை மறுமணம் செய்துள்ளார். ராஜஸ்தானி அமைந்துள்ள பிரம்மாண்டமான அரண்மனையில் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி ஹன்சிகா திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
திருமணம் முடிந்த கையோடு நேற்று மும்பை விமான நிலையத்திற்கு ஜோடியாக கை கொடுத்தபடி வந்த ஹன்சிகா பத்திரிகையாளர்களிடம் பேசினார். அப்போது ஹனிமூன் எங்கே என்று அவர்கள் கேட்க அதற்கு எந்த ஒரு பதிலும் அளிக்காமல் சிரித்தபடியே ஹன்சிகா சென்று விட்டார். இந்நிலையில் ஹன்சிகா திருமண முடிந்த கையோடு ஹனிமூன் சொல்லிவிட்டு படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் அடுத்தடுத்த படங்களை கையில் வைத்திருக்கும் அன்சிகா ஷூட்டிங் முடித்த பிறகு தான் ஹனிமூன் செல்ல உள்ளதாக கணவரிடம் கண்டிஷன் போட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க