Categories
மாநில செய்திகள்

திருமணம் சார்ந்த நிகழ்வுகளுக்கு புதிய கட்டுப்பாடு…. தமிழக அரசு அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த மாதம் கொரோனா பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனால் தமிழக அரசு ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட  பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியதன் பலனாக தொற்று பரவல் சற்று குறைந்து வருகிறது. இதையடுத்து தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு போன்றவை ரத்து செய்தது. மேலும் பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

எனினும் ஒரு சில கட்டுப்பாடுகள் அமலில் இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப்ரவரி 16 முதல் மார்ச் 2 வரை அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 200 நபர்களுடன் மட்டுமே நடத்த அனுமதி என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது..

Categories

Tech |