சுந்தரி சீரியல்நடிகை கேப்ரியலா தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது .
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தடை செய்யப்பட்ட சீன செயலியான டிக் டாக் மூலம் பிரபலமடைந்தவர் கேப்ரியலா. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பலரது கவனத்தை ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்பின் டிக்டாக்கில் இருந்து சினிமாவிற்குள் நுழைந்த கேப்ரியலா முதல் படமே நடிகை நயன்தாராவின் இளவயது கதாபாத்திரமாக ஐரா படத்தில் நடித்து அசத்தினார்.
இதைத்தொடர்ந்து இவர் செத்தும் ஆயிரம் பொன் என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது கேப்ரியலா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சுந்தரி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் கேப்ரியலா தனது நீண்ட நாள் காதலரான ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தனது கணவருடன் கேப்ரியலா எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் இவரா கேப்ரியலாவின் கணவர்! என ஆச்சர்யமடைந்துள்ளார்.