Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

திருமணமான 6 நாட்களில் இறந்த மனைவி…. புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குந்தலம்பட்டு கிராமத்தில் கட்டிட தொழிலாளியான முருகன்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 9-ஆம் தேதி முருகனுக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சந்தியா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் விருந்துக்கு சென்ற சந்தியா திடீரென மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சந்தியாவை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மனைவி இறந்த துக்கத்தில் இருந்த முருகனுக்கு உறவினர்கள் ஆறுதல் கூறியுள்ளனர். அவர் நேற்று விவசாய நிலத்தில் இருக்கும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். திருமணமான 6 நாளில் மனைவி இறந்ததால் கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |