புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அறுகுவிளை பகுதியில் வினு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிராமி(22) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அபிராமிக்கு மனோஜ் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் அபிராமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மனோஜ் அபிராமியின் பெற்றோருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அபிராமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனை எடுத்து வினு பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் மனோஜின் தாயார் நாகேஸ்வரி, பாட்டி கிருஷ்ணம்மாள் ஆகியோர் எனது மகளிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளனர். இதனால்தான் அபிராமி தற்கொலை செய்து கொண்டார் என குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.