வயிற்று வலி தாங்க முடியாமல் கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள காவேரி வசந்தநகரில் சின்னராசு என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மணிமேகலை என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக சின்னராசு கடும் வயிற்றுவலி அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக சிகிச்சை பெற்றும் குணமடையாத நிலையில் வயிற்றுவலி தாங்க முடியாமல் தவித்த சின்னராசு வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் சின்னராசு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து பள்ளிபாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.