Categories
தேனி மாவட்ட செய்திகள்

திருமணமான 10 மாதங்களில்… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… பல்வேறு கோணங்களில் விசாரணை…!!

இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை அடுத்துள்ள அனுமந்தன்பட்டி பகுதியில் உள்ள கோனார் தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவர் கடந்த 10 மாதங்கள் முன்பு ஷருபதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் திருமண முடிந்து இருவரும் எந்த பிரச்சினையும் இன்றி மகிழ்ச்சியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று ஷருபதி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தனது அறையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக உத்தமபாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஷருபதியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து ஷருபதி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்றும், வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்றும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனைதொடர்ந்து திருமணமாகி 10 மாதங்களில் இளம்பெண் உயிரிழந்ததால் உத்தமாபாளையம் ஆர்.டி.ஒ கவுசல்யாவும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Categories

Tech |