Categories
சினிமா

திருமணமாகி 8 வருடங்கள் கழித்து குட் நியூஸ் சொன்ன இயக்குனர் அட்லி…. குதூகளத்துடன் வெளியிட்ட புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் அட்லி. இவர் ஆரம்பத்தில் இயக்குனர் சங்கரிடம் துணை இயக்குனராக பணியாற்றி வந்த நிலையில் நயன்தாரா மற்றும் ஆர்யா நடிப்பில் வெளியான ராஜா ராணி என்ற திரைப்படத்தை முதன்முதலாக இயக்கினார். அந்தத் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் சினிமாவில் இளைய தளபதியாக வலம் வரும் நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கி வெற்றி கொடுத்தார்.

தற்போது ஷாருக்கான் உடன் ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு விஷ்ணு பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் சுமார் 8 வருடங்கள் கழித்து கடந்த மாதம் 30ம் தேதி இவர்களின் திருமண நாளை கொண்டாடினர். இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருப்பதே twitter பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள நிலையில் அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |