Categories
சினிமா

திருமணத்திற்கு பின் மஞ்சள் சேலையில் நயன் முதல் Photo…. வைரல்….!!!!

சுமார் 7 ஆண்டுகாலம் காதலித்து வந்த விக்னேஷ் சிவன் -நயன்தாரா ஜோடிக்கு நேற்று திருமணம் நடந்துமுடிந்தது. பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பிரபலங்கள் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின், ஷாருக்கான் ஆகியோர் வருகை தந்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தாலி எடுத்து கொடுக்க அதனை கண்களில் நீர் ததும்ப விக்னேஷ் சிவன், நயன்தாரா கழுத்தில் கட்டினார்.இதனைத் தொடர்ந்து அவர்களின் திருமண புகைபடங்கள் ஒவ்வொன்றாக சமூக வலைத் தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. அது ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்நிலையில் விக்கி-நயன் தம்பதியர் நேற்று திருமணம் முடிந்த கையோடு இன்று திருப்பதிக்கு வந்துள்ளனர். திருப்பதியில் தான் முதலில் கல்யாணம் செய்ய நயன்தாரா ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால் சில காரணங்களுக்காக சென்னையிலேயே திருமணம் முடிந்தது. இன்று முதல் வேலைக்காக திருப்பதியில் தம்பதியினர் சாமி தரிசனம் செய்துள்ளனர். அதில் நயன்தாரா மஞ்சள் நிற புடவையில் ஜொலிக்க விக்கி வழக்கம்போல பட்டு வேட்டி சட்டையில் கலக்குகிறார். அந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |