ஆத்தூர் அருகே கடம்பூர் வடக்கு தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். லாரி டிரைவர் ஆன இவர் கடந்த 24ஆம் தேதி பைத்தூர் பகுதியில் கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக சீனிவாசனின் அத்தை மகன் ரவிச்சந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடைய மகன்கள் மணிகண்டன், விஜய் இருவரும் ஆத்தூர் கோட்டில் சரணடைந்துள்ளனர். இதற்கிடையே கைதான ரவிச்சந்திரனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது போலீசில் அளித்த வாக்கு மூலத்தில் கூறப்பட்டிருப்பதாவது, சீனிவாசனுக்கும் எங்களுக்கும் நிலம் தொடர்பாக பிரச்சனை இருந்தது.
இது தொடர்பாக ஊரில் பஞ்சாயத்து மற்றும் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தோம். மேலும் எங்களுடைய மகனுக்கு திருமண ஏற்பாடு செய்துள்ளோம். அதற்கு இடையூறாக இருந்து வந்ததால் சீனிவாசன் மீது ஆத்திரம் ஏற்பட்டது. அதனால் மோட்டார் சைக்கிளில் பைத்தூர் கிராமம் வழியாக ஆத்தூர் சென்றபோதும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அவரை வழிமறித்து குத்தி கொன்று விட்டு தப்பி ஓடி விட்டோம். ஆனால் போலீசார் எங்களை பிடித்து விட்டனர் என ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.