Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணத்தின்போது உருவக்கேலிக்கு ஆளானேன்…. நடிகை மஞ்சிமா மோகன் ஓபன் டாக்…!!!

பிரபல நடிகர் கௌதம் கார்த்திக் கடல் படம் மூலமாக நாயகனாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து தந்திரன், மிஸ்டர் சந்திரமௌலி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.இவரும் நடிகை மஞ்சிமா மோகனும் தேவராட்டம் படத்தில் இணைந்து நடித்த நிலையில் அவர்களுக்குள் காதல் மலர்ந்ததாகவும் தற்போது இருவரும் காதலித்துருவதாகவும் தகவல் வெளியாகி வந்தது.

இந்நிலையில்  சென்னையில் கடந்த நவ.28ம் தேதி கவுதம் கார்த்தி – மஞ்சிமா மோகன் திருமணம் நடைபெற்றது. இதில் திரை நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டனர்.  இதனிடையே, மஞ்சிமா மோகன் பேட்டி ஒன்றில், சமூக வலைத்தளங்களில் மட்டும் நான் உருவக்கேலிக்கு ஆளாகவில்லை. எனது திருமணத்தன்றும் நான் உருவக்கேலிக்கு ஆளானேன். அதை நான் பொருட்படுத்தவில்லை. எனது உடல் எடையில் நான் சவுகரியமாகவே இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |