மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா அதிகமாக இருக்கிறது. சென்னை தமிழகத்தின் ஹாட்ஸ்பாட்டாக சென்னை விளங்கியதை போல மதுரையிலும் கொரோனா தொற்றில் தாக்கம், அதன் வேகம், அதன் பரவல் தொடர்ந்து அதிகரித்து மக்களை அச்சுறுத்தியது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு, ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருந்தது.
அரசு அறிவித்துள்ள தளர்வுகள் மதுரை தாலுகாவில் ரத்து செய்யப்படுவதாக நகராட்சி ஆணையர் சுருளிநாதன் உத்தரவிட்டுள்ளார். திருமங்கலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என்று கூறியுள்ளார். மதுரையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மேலும் சில இடங்களில் ஊரடங்கு தொடர வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.