திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பாக அமைக்கப்பட்ட சதுரங்க போட்டியின் செல்பி ஸ்பாட்டில் பொதுமக்கள் ஏராளமானோர் நின்று செல்பி எடுத்துக் கொண்டார்கள்.
சென்னை மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகின்ற 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையும் சார்பாக நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றது.
இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சதுரங்க போட்டியில் செல்பி ஸ்பார்ட் அமைக்கப்பட்டது. அதில் நமது பெருமை என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது இதில் ஆட்சியர் வினீத் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும் அதிகாரிகள் பலரும் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். மக்களும் செல்பி எடுத்துக் கொண்டார்கள்.