Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. சர்வதேசத் தளத்தில் உருவாகும் ரயில் நிலையம்…. அமைச்சர் அதிரடி….!!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையானை சந்திக்க வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிகமான பக்தர்கள் வருகின்றனர். பெரும்பாலான பக்தர்கள் திருப்பதி வருவதற்காக ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சர்வதேச தரத்தில் திருப்பதி ரயில் நிலையத்தை ரூ.350 கோடி செலவில் அமைக்க உள்ளது என்று ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த திட்ட நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்த நிலையில், முந்திய திட்டங்களை மாற்றி புதிய திட்டத்தை முன் வைக்கப்பட்டு உள்ளது. அதனைதொடர்ந்து தெற்குப் பகுதியில் உள்ள ரயில் நிலைய கட்டிடத்தின் மேம்பாடு அடித்தளம், தரைத்தளம் மற்றும் 3 தளங்களுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் வடக்குப் பகுதியில் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களுடன் புதிய கட்டிடம் கட்டப்படும் மேலும் ரயில் நிலைய கட்டிடத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியை இணைக்கும் வகையில் 35 மீட்டர் அகலத்தில் இரண்டு பாதைகள் அமைக்கப்படும். அதனை தொடர்ந்து பிளாக்கில் உள்ள அடித்தளத்தில் 500 கார்கள் நிறுத்த கூடிய வகையில் பார்க்கிங் வசதி செய்யப்படும். மேலும் 23 லிப்ட், 20 எஸ்கலேட்டர், 150க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா, காத்திருப்பு அறைகள், உணவகங்கள், ஓய்வு அறைகள், பூங்கா, வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கூடிய ரயில் நிலைய மாதிரி புகைப்படத்தை மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்டார்.

Categories

Tech |