ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இதற்கிடையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனையடுத்து பாதிப்பு சற்று குறைந்த நிலையில், தற்போது பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த வாரங்களில் ஆந்திராவில் பெய்த கனமழையால் பெரும் திருமலை பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. கோயில் வளாகம் மழைநீரில் சூழ்ந்ததது. அதனால் பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு வர வேண்டாம் என்று தேவஸ்தானம் அறிவுறுத்தியது. இதை எடுத்து டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் மழை நின்றவுடன் சுவாமி தரிசனம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் ஆன்லைன் டிக்கெட் பெற்றவர்கள் 6 மாதம் வரை தரிசனம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டதையடுத்து வருகிற 13-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை 10 நாட்கள் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு வைகுண்ட வாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். அதனால் நவம்பர் மாதம் 18-ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 10-ஆம் தேதி வரை ஆன்லைனில் தரிசன டிக்கெட் பெற்றவர்கள், வைகுண்ட ஏகாதசி நாட்களில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். எனவே வேறு தேதிகளில் திருப்பதி தரிசனம் செய்யலாம் என்று தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளனர்.