Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு ஷாக் நியூஸ்…. இனி 11-மணிக்குள்…. அரசு திடீர் உத்தரவு….!!!!

ஆந்திராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மாநில அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. அதன்படி பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும்.

அதனால் பேருந்து, லாரி மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் இரவு 11 மணிக்கு மேல் இயங்க அனுமதி கிடையாது. உணவுப்பொருட்கள் மற்றும் பால் உள்ளிட்ட அத்தியாவசிய வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி. வெளியூரில் இருந்து திருப்பதிக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் இரவு 11 மணிக்குள் வந்து விட வேண்டும். தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |