Categories
தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவில் செல்பவர்களுக்கு…. 300 ரூபாய் தரிசன டிக்கெட்….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானம் சார்பில் 300 ரூபாய் தரிசன கட்டண டிக்கெட் நாளை வெளியிடப்படுகின்றது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தானம் சார்பாக மாதம்தோறும் 300 ரூபாய் தரிசன கட்டண டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகின்றது. அதன்படி அக்டோபர் மாதத்திற்கான 300 ரூபாய் தரிசனம் டிக்கெட் நாளை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. வருடாந்திர பிரமோற்சவ விழா செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவை காண நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரம்மோற்சவ விழா பக்தர்கள் யாரும் இன்றி நடைபெற்றது. இதனால் இந்த ஆண்டு கூடுதலாக பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே பிரம்மோற்சவ விழா நாட்களில் இலவச தரிசனத்திற்கு மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 5ம் தேதி வரை 300 ரூபாய் டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்படாது. எனவே தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் 24 நாட்களுக்கான 5 லட்சத்து 20 ஆயிரம் டிக்கெட்டுகள் நாளை காலை ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. திருப்பதியில் நேற்று மட்டும் 72000 மேற்பட்டோர் தரிசனம் செய்தனர்.

Categories

Tech |