திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் 6-ம் நாளான இன்று காலை அனுமந்த வாகன சேவை நடைபெற்றது.
கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு உற்ஜவர் மலையப்ப சுவாமி காலை, இரவு ஆகிய வேலைகளில் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்நிலையில் உற்சவத்தின் 6-ம் நாளான இன்று திருப்பதி ஏழுமலையானின் உற்சவ மூர்த்தியான மலையப்ப சுவாமி கோவிலில் இருக்கும் அரங்கநாயக மண்டபத்தை அடைந்து தங்க அனுமந்த வாகனத்தில் எழுந்தருளினார். இதைத்தொடர்ந்து சர்வ தீர்பவனே அலங்கார திருக்கோலம் பூண்டு உற்சவர்கள் ரூப தீப நெய்வைத்தியம் கண்டருளினர். இதையடுத்து அரங்கநாயக மண்டபத்தில் அனுமந்த வாகன சேவை நடைபெற்றது.