Categories
மாநில செய்திகள்

திருப்பதி ஏழுமலையானுக்கு ஒரே நாளில் எவ்வளவு நன்கொடை தெரியுமா?…. அள்ளிக் கொடுத்த நெல்லை பக்தர்கள்….!!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிகமான பக்தர்கள் வருகை புரிவார்கள். இந்தியாவிலேயே அதிகம் நன்கொடை பெறும் கோவிலாக திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளது. திருப்பதி ஏழுமலையான் பணக்கார சுவாமி என்று அழைக்கப்படுகின்றன. தற்போது தினமும் சராசரியாக ரூ.4 கோடி வரை உண்டியல் மூலம் காணிக்கை செலுத்தப்படுகிறது. ஆண்டுக்கு உண்டியல் வருவாய் ரூ.1,500 கோடியை தாண்டும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் தங்கம், வைர நகைகள், வெள்ளிப் பொருட்கள், பத்திரங்களை தவிர தேவஸ்தானம் அறகட்டளைகளுக்கு உலகெங்கும் உள்ள பக்தர்கள் ரொக்கமாக கோடிக்கணக்கில் காணிக்கை வழங்கி வருகின்றனர். மேலும் இ-உண்டியல் மூலம் பக்தர்கள் தினமும் லட்சக்கணக்கில் காணிக்கை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திருநெல்வேலியை சேர்ந்த தொழிலதிபர் கோபாலகிருஷ்ணன் என்பவர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பிரதான திட்டம், கோ சம்ரக் ஷன திட்டம், தேவஸ்தான எலும்பு சிகிச்சை மருத்துவமனை, வேத பரிரத்ஷன அறக்கட்டளை, அன்னபிரசாத திட்டம், சர்வ ஸ்ரேயாஸ் திட்டம், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் ஆகிய திட்டங்களுக்கு தலா ரூ.1 கோடி வீதம் ரூ.7 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். அதனை தொடர்ந்து திருநெல்வேலியை சேர்ந்த ஏ-ஸ்டார் அண்ட் இன்ஸ்பெக்ஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தேவஸ்தான வித்தியானதன திட்டத்துக்கு ரூ.1 கோடி, பாலகிருஷ்ணா பெட்ரோல் பங்க் சார்பில் கோயில் கட்டும் திட்டத்திற்கு ரூ.1 கோடி, ஸீ-ஹப் இன்ஸ்பெக்ஷன் சர்வீஸ் சார்பில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பராம்பரிய அறக்கட்டளைக்கு ரூ. 1 கோடி என மொத்தம் 10 கோடி நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேவஸ்தான வரலாற்றில் ஒரே நாளில் 10 கோடி நன்கொடை பெறுவது இதுவே முதல் முறையாகும் என்றும் தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |