Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

திருட முயன்ற மர்ம நபர்கள்… அதிஷ்டவசமாக தப்பிய 1 லட்சம்… போலீஸ் தீவிர விசாரணை…!!

டாஸ்மார்க் கடையின் பூட்டை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள பொத்தனூர் தண்ணீர்பந்தல்மேடு பகுதியில் மதுபானக்கடை ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் சம்பவத்தன்று கடையில் விற்பனையை முடித்துவிட்டு மேற்பார்வையாளர் சுப்பிரமணி மற்றும் விற்பனையாளர் செல்லப்பன் ஆகியோர் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து மறுநாள் காலையில் வழக்கம்போல கடையை திறப்பதற்கு விற்பனையாளர் வந்துள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து கடைக்கு உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

மேலும் உள்ளே இருந்த 2 கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் மதுபான பாட்டில்கள் காணமல் போயிருந்துள்ளது. இந்நிலையில் கடையில் தனியாக வைக்கப்பட்டிருந்த 1,50,000 ரூபாயை திருட வந்தவர்கள் விட்டு சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சென்ற பரமத்திவேலூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை வைத்து டாஸ்மார்க் கடையில் திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Categories

Tech |