திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த அஜய்பால் சிங்கிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டன் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த வருடம் 2020 மே மாதம் 1 ஆம் தேதி அன்று ஒரு வீட்டில் 40 வயது ஆண் மற்றும் 11 வயது சிறுவன் இருவரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்ற போது அந்த நபரின் தலையில் கத்திக் குத்துக் காயங்களும், சிறுவனின் தோள் பட்டையில் துப்பாக்கி சூடு நடந்திருப்பதையும் கண்டுபிடிக்கத்தனர். இதனை அடுத்து காயம் அடைந்த இருவரையும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை மேற்கொண்டதில் அந்த வீட்டிற்குள் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் புகுந்து, வீட்டில் இருந்தவர்களை ஆயுதங்களை கொண்டு தாக்கி காயப்படுத்திவிட்டு பின்னர் அங்கிருந்து 20 ஆயிரம் பவுண்டு இந்திய மதிப்பில் சுமார் 19 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் நகை உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து மெட்ரோபோலிடன் காவல்துறை டி.சி. டேரன் வாரன் தலையிலான போலீசார் தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டனர். இந்த நகை திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ள அஜய்பால் சிங், அந்தோனி லாசஸ் மற்றும் கிறிஸ்டோபர் சார்ஜண்ட் ஆகிய 3 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அஜய்பால் சிங் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை லண்டனில் உள்ள ஸ்னேர்ஸ்ப்ரூக் கிரவுன் கோர்ட்டில் நடைபெற்றது. இதில் இவர்கள் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டதையடுத்து அஜய்பால் சிங்கிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், அந்தோணி மற்றும் கிறிஸ்டோபர் இருவருக்கும் 18 மற்றும் 15 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளன.