திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகை நயன்தாரா சாமி தரிசனம் செய்தார்.
மூக்குத்தி அம்மன் என்னும் புதிய திரை படத்தில் அம்மன் வேடத்தில் நயன்தாரா நடித்து வரும் நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். நேற்று கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்திய நயன்தாரா இன்று காலை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று சுப்பிரமணியசாமி கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தார். இதனை அடுத்து சுப்ரமணிய சுவாமி சன்னதியில் இருவரும் தரிசனம் செய்தனர். நடிகை நயன்தாரா கோயிலுக்கு வந்ததை அறிந்துபலரும் அங்கு குவிந்தனர் .தரிசனம் முடிந்து வெளியே வந்த நயன்தாரா தனது ரசிகர்களை நோக்கி கையை அசைத்தபடி அங்கிருந்து புறப்பட்டு சென்றார் .