Categories
மாநில செய்திகள்

திருச்செந்தூர் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி…. வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த மே 10ஆம் தேதி தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் மக்களும் சற்று நிம்மதி அடைந்தனர். அதன் பிறகு தமிழக அரசு ஊரடங்கு தளர்வு கள் அறிவித்தது. ஆனால் கடந்த ஒரு சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. அதனால் பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆடி மாதத்தில் கோவில்களில் கூட்டம் கூடுவதை தடுக்கும் வகையில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. அந்தத் தடை நேற்றோடு முடிவடைந்த நிலையில் பக்தர்கள் இன்று முதல் திருச்செந்தூர் கோவிலில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதனைப்போலவே வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் தரிசனத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது.

Categories

Tech |