Categories
அரசியல் திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

திருச்சி ஓன்று அழைக்கப்பட்ட தொகுதி மறுசீரமைப்பில் திருச்சி கிழக்கு என பெயர் மாற்றம் பெற்றது. இங்கு காங்கிரஸ் மற்றும் சுயேட்சை வேட்பாளர் தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளனர். திமுக 8 முறையும், அதிமுக 5 முறையும் தொகுதியை கைப்பற்றியுள்ளனர். தற்போதைய எம்.எல்.ஏ அதிமுக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன். திருச்சி கிழக்கு தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,54,427 ஆகும். போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என்பது பிரதான கோரிக்கையாக உள்ளது.

சாலை விரிவாக்கம், மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. வணிகர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் காந்தி மார்க்கெட் பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் விரும்புகின்றனர். கேகே நகர், எடைமலைப்பட்டி புதூர் உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

திருச்சி ரயில்வே ஜங்ஷன் மேம்பாலத்தை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. சிந்தாமணி பகுதியில் காவிரி ஆற்றில் கழிவுநீரை மாநகராட்சி நிர்வாகமே திறந்து விடுவதாக குற்றம்சாட்டும் மக்கள் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக ஆளும் கட்சியின் எம்எல்ஏக்களே இருந்தும் அடிப்படை பிரச்சினைகளுக்கு கூட தீர்வு காணவில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

Categories

Tech |