திம்பம் மலைப்பாதையில் உள்ள வளைவில் லாரி திரும்ப முடியாமல் நின்றதால் சுமார் 5 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள ,தாளவாடி அருகே இருக்கும் திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் இருக்கின்றது. இந்த மலைப்பாதை வழியாக தமிழகம் – கர்நாடகாவிற்கு தினந்தோறும் நிறைய வண்டிகள் செல்வதால் இரவு நேரத்தில் ரோட்டை கடக்கும் வனவிலங்குகள் வண்டிகளில் மோதி இறப்பதாக கடந்த பிப்ரவரி மாதம் பத்தாம் தேதியில் இருந்து மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேரம் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கோவையிலிருந்து கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூருக்கு கண்டெய்னர் லாரி ஒன்று திம்பம் மலைப்பாதையில் 9-வது கொண்டை ஊசி வளைவில் சென்றது . அப்போது குறுகிய வளைவாக இருந்ததால் திரும்ப முடியாமல் லாரி நின்றது . இதனால் அந்தப் பகுதியில் பஸ், கார், லாரி, சரக்கு வாகனம் உட்பட எந்த வண்டியும் செல்ல முடியாமல் சாலையின் இருபுறமும் வரிசையாக நின்றன.
இதனை அடுத்து பண்ணாரியிலிருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு லாரியை மீட்டனர். அதன்பின் போக்குவரத்து சீராகி அனைத்து வாகனங்களும் சென்றுள்ளன. இதனால் சுமார் 5 1/2மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் காலை நேரத்தில் உணவு, தண்ணீர் இல்லாமல் பயணிகளும், வாகன ஓட்டிகளும் பெரிதும் அவதிப்பட்டனர்.