தமிழகத்தில் திமுகவின் தேர்தல் அறிக்கை ஒரு செல்லாத நோட்டு என்றும் அதிமுகவின் தேர்தல் அறிக்கை நல்ல நோட்டு என்றும் ஓபிஎஸ் கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதற்கு மத்தியில் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக அனைத்து கட்சிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறது. அதுமட்டுமன்றி ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் மக்களை கவரும் வகையிலான பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் போட்டியிடும் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மக்களை நேரில் சந்தித்து ஓட்டு சேகரிக்கும் பணியில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் கோவையில் தேர்தல் பிரசாரம் செய்த துணை முதல்வர் பன்னீர்செல்வம், ஸ்டாலின் சொல்வதெல்லாம் பொய் என்றும் பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவர் ஸ்டாலின் என்று அவர் விமர்சித்துள்ளார். ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து டெல்லிக்கு சென்று பிரதமரிடம், தான் விளங்கியதாகவும் உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் பிரதமர்தான் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் திமுகவின் தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு என்றும், அதிமுகவின் தேர்தல் அறிக்கை நல்ல நோட்டு என்றும் அவர் கூறியுள்ளார். அதுமட்டுமன்றி அறிமுகம் செய்துள்ள பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார்.