திமுக கட்சியில் அமைச்சர்களின் பட்டியல்கள் ரெடியாகி உள்ளதாகவும் அதை நாளை ஆளுநரிடம் வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி நடைபெற்றது. இதில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்க போகின்றது. மேலும் திமுக கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக மு க ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து நாளை காலை 10 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்.
மேலும் தமிழக அமைச்சரவை பட்டியலையும் ஆளுநரிடம் வழங்க உள்ளார். அமைச்சர்கள் பட்டியலில், கே என் நேரு, பொன்முடி, ஐ பெரியசாமி, தங்கம் தென்னரசு, தமிழரசி மற்றும் உதயநிதி ஆதரவாளர்கள் 7 பேருக்கு முன்னுரிமை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.