Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவுக்கு ஆதரவில்லை…. “விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டி”… புஸ்ஸி ஆனந்த் அதிரடி..!!

அனைத்து மாவட்ட விஜய் மக்கள் இயக்கமும் தனித்து போட்டியிடும் என்று பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறுகிறது. திமுக, அதிமுக உட்பட அனைத்து அனைத்து கட்சிகளும் தேர்தலில் வெற்றியை வசப்படுத்தி விட வேண்டும் என்று தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.. அதேபோல கடந்த உள்ளாட்சி தேர்தலில் பல இடங்களில் வென்ற விஜய் மக்கள் இயக்கமும் போட்டி போட்டு கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நகர்ப்புற தேர்தலில், எந்த கட்சியுடனும் கூட்டணி ஆதரவின்றி விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டியிடும் என்று புஸ்ஸி ஆனந்த் விளக்கமளித்துள்ளார். அதாவது, நகர்ப்புற தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டியிடும்.. நகர்ப்புற தேர்தலில் போட்டியிடும் விஜய் மக்கள் இயக்க வேட்பாளர்களுக்கு முழுமூச்சுடன் பிரச்சாரம் செய்யுங்கள்.. விஜய் மக்கள் இயக்கத்தின் நற்பணிகளை மக்களிடத்தில் சேர்த்து வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள்” என்று அவர் கூறியுள்ளார்..

சில நாட்களுக்கு முன் திமுகவுக்கு தூத்துக்குடி விஜய் மக்கள் இயக்க தலைவர் ஆதரவு தெரிவித்த நிலையில், புஸ்ஸி ஆனந்த் விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |