Categories
அரசியல் மாநில செய்திகள்

“திமுகவிற்கு முற்றுப்புள்ளி வைப்போம்”… ஈபிஎஸ் – ஓபிஎஸ் சபதம்…

தமிழகத்தில் திமுகவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது.

அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைத்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த சில நாட்களாகவே அதிமுக பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறது. மேலும் மக்களை கவரும் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதனை அடுத்து ஒவ்வொரு கட்சியினரும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இதனை அடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி தேர்தல் பிரசாரம் செய்யும் போது, அதிமுகவை நிராகரிப்போம், புதிய விடியலை நோக்கி பயணிப்போம் என ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்ட நிலையில், “திமுகவிற்கு முற்றுப்புள்ளி வைப்போம்” என்று அதிமுக பரப்புரை மேற்கொள்வதாக ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அறிவித்துள்ளனர். வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற பரப்புரையை தொடர்ந்து திமுகவிற்கு எதிரான பரப்புரையை அதிமுக தொடங்கியுள்ளது.

Categories

Tech |