Categories
தேசிய செய்திகள்

தினமும் 1 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும்…. ஐசிஎம்ஆர் அறிவிப்பு….!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறைஇல்லை என்றும் ஆகஸ்ட் மாதத்தில் தினமும் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தும் அளவிற்கு போதுமான அளவில் டோஸ்கள் கிடைக்கும் என்றும் டிசம்பர் மாதத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி போட முடியும் என்று ஐ சி எம் ஆர் தெரிவித்துள்ளது. மேலும் சுகாதார மற்றும் முன் களப்பணியாளர்கள், 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் என மொத்தம் 21.60 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |