இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.
அதனால் மக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் தடுப்பு ஊசி செலுத்தி கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி புதுச்சேரியில் தடுப்பூசி திருவிழா மேலும் இரண்டு நாட்கள் நீடிக்க படுவதாகவும், தடுப்பூசி திருவிழா நடைபெறும் ஆறு நாட்களில் தினம்தோறும் 25 பேருக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.