Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தினமும் குடிச்சிட்டு வராரு…. இளம்பெண் விபரீத முடிவு…. போலீஸ் தீவிர விசாரணை….!!

கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் கந்தம் பாளையத்தில் உள்ள குன்னமலை ஊராட்சி பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். கிளீனிங் பவுடர் விற்பனை செய்து வரும் இவருக்கு சத்யா என்பவர் வசித்து வந்துள்ளார். தற்போது இவர்களுக்கு ஜெயதேவ் என்ற 4 வயது மகனும், ராஷ்மிகா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கண்ணன் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த சத்யா வீட்டில் இருந்த எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனைதொடர்ந்து சத்யா மயங்கி கிடப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருச்செங்கோடு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சத்யா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையறிந்த சத்தியாவின் தந்தை நல்லூர் காவல் நிலையத்தில் சத்யா தற்கொலை குறித்து உரிய விசாரணை நடத்தி அதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |