தினமும் ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி இந்த தொகுப்பு தெரிந்து கொள்வோம்.
வெளித்தோற்றத்தில் பச்சையாக இருந்தாலும் இதில் நிறைய சத்துகள் ஒரு உள்ளது. இது மலைப்பகுதியில் விளையக்கூடியது. குறிப்பிட்ட மலைப் பகுதிகளில் விளையக்கூடியது. இதை சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இந்த பழத்தில் வைட்டமின் ஏ, பி, பி2 என்ற சத்துக்கள் உள்ளது. இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, உள்ளது.
பேரிக்காய் கிடைக்கும் காலங்களில் வாங்கி இரவு உணவுக்குப்பின் படுக்கைக்கு செல்லும் முன் ஒரு பழம் வீதம் சாப்பிடக் கொடுத்தால் குழந்தைகள் நன்கு வளர்ச்சி பெறுவார்கள்.
வளரும் குழந்தைகளுக்கு சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அவசியத் தேவை. இந்த சத்துக்கள் பேரிக்காயில் நிறைந்துள்ளன. பேரிக்காய் எலும்பு, தசை வளர்ச்சிக்கும் உடல் வலுவுக்கும் உதவுகிறது.
இதயம் படபடப்பு உள்ளவர்கள் தினம் இரு வேளை பேரிக்காய் சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும்.
கர்ப்பிணி பெண்கள் குழந்தை நன்கு வளர பேரிக்காய் சாப்பிடுவது மிகவும் நல்லது. தாய்ப்பால் சுரக்க சாப்பிடுவது மிகவும் உகந்தது. தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தினமும் ஒரு பேரிக்காய் சாப்பிடவேண்டும்.
வாய்ப்புண் குணமாக, வயிற்றுப் புண் ஆற்றும் சக்தி பேரிக்காய்க்கு உண்டு. தினமும் ஒரு பேரிக்காய் சாப்பிட்டால் வயிற்றுப்புண் விரைவில் குணமாகும்.
இரத்தத்தில் இருந்து பிரிந்த தாது உப்புக்கள் சிறுநீரகத்தில் படிந்து அவை கல்லாக மாறுகின்றன. இவற்றைப் உடைத்து வெளியேற்ற தினமும் இரண்டு பேரிக்காய் சாப்பிட்டு வருவது நல்லது