Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திட்டம் போட்டு நடந்த திருட்டு…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…. 5 வாலிபர்கள் கைது….!!

இருசக்கர வாகனத்தை திருடிய 5 பேரை கைது செய்த போலீசார் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் நேரு நகரில் உள்ள 5-வது தெருவில் ராஜ்குமார் பாரதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புதிதாக வாங்கிய தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். அப்போது மர்மநபர்கள் சிலர் இருசக்கர வாகனத்தை திருடியுள்ளனர். இதனையறிந்து அதிர்ச்சியடைந்த ராஜ்குமார் உடனடியாக கேணிக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ராமநாதபுரத்தை சேர்ந்த மணிகண்டன், பாட்டில்மணி, சுசீந்திரன், சபரி மணிகண்டன், வைகை நகரை சேர்ந்த மணிகண்டன் ஆகிய 5 பேர் திட்டம் போட்டு இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து காவல்துறையினர் அந்த 5 பேரையும் கைது செய்து இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட 5 பேரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |