Categories
மாநில செய்திகள்

“திட்டங்களை நாங்கள் தீட்டீனாலும்….. மக்களிடம் சேர்க்க வேண்டியது நீங்கள் தான்”….. மு.க.ஸ்டாலின்….!!!!

சென்னை கலைவாணர் அரங்கில் பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள் நிர்வாக பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் முக ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர் “நிர்வாக பணிகளில் ஈடுபட இருக்கும் உங்களிடம் சிறப்பான செயல்பாட்டை நாங்கள் எதிர்பார்க்கிறோம். மக்களுக்காக பணியை சிறப்பாக செய்ய வேண்டும். அதற்கு தான் இந்த பயிற்சி முகாம். கோட்டையில் அமர்ந்து கொண்டு நாங்கள் என்னதான் திட்டம் திட்டினாலும், அதனை சரியான முறையில் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டியது உங்களுடைய கடமை.

அந்த பொறுப்பும் கடமையும் உள்ளதை மனதில் வைத்துக் கொண்டு செயலாற்ற வேண்டும். மக்களுக்கு தொண்டாற்ற தேர்தல் நடத்தப்படுகிறது. எவ்வித முறைகேடும் புகாரும் இல்லாமல் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடித்துள்ளோம். அரசியல் சட்டத்திருத்த படி ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.

Categories

Tech |